ADDED : மே 17, 2024 08:01 AM

அ நிறம் | அளவு
இளமைக் காலத்தில் 'அல்அமீன்' என்ற பட்டத்தை பெற்றவர் நபிகள். 'நம்பிக்கைக்கு உரியவர்' என்பது இதன் பொருள். மெக்காவாசிகளிடம் இப்படி பெயர் வாங்குவது சுலபமானதல்ல. ஏனெனில் அவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்.
ஒருநாள் அவர் மக்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அதை விரும்பாத குரைஷிகள் அதைக் கைவிடும்படி வலியுறுத்தினர். பொன்னும், பொருளும் தருவதாக கூறினர்.
அதற்கு நாயகம், ''ஒரு கையில் சூரியன், மறு கையில் சந்திரன் என பரிசளித்தாலும் அறிவுரை சொல்வதை விட மாட்டேன்'' எனத் தெரிவித்தார்.
