sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

வேலையை காதலியுங்கள்

/

வேலையை காதலியுங்கள்

வேலையை காதலியுங்கள்

வேலையை காதலியுங்கள்


ADDED : மார் 25, 2022 11:36 AM

Google News

ADDED : மார் 25, 2022 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாபாரி ஒருவர் பெரிய தொழிலதிபராக வர வேண்டும் என ஆசைப்பட்டார். ஆசைப்பட்டால் மட்டும்போதுமா அதற்கு உழைக்க வேண்டுமல்லவா... அவருக்கு அது தெரியவில்லை. உழைப்பின் பக்கம் அவர் செல்லாததால் தோல்வி அவரை அணைத்துக்கொண்டது. தொழிலில் நஷ்டத்தை சந்தித்தார்.

காற்று போன பலுான் போல அவரது மனம் மாறியது. வீட்டிற்கு செல்ல மனமில்லை. கால்போன போக்கில் ஆற்றங்கரைக்கு சென்றார்.

அங்கே மெல்லிய நிலா வெளிச்சம் ஆற்றங்கரையை அலங்கரித்தது. ஓரிடத்தில் அமர்ந்தவர் தனது நினைவுகளை ஓடவிட்டார். வியாபாரத்தில் தோற்றுப்போன கடந்தகாலம் அவரை அழுத்தியது. குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம் என்னும் எதிர்காலம் அவரை சுக்குநுாறாக்கியது. இப்படி மனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, கையும் அருகில் இருந்த கற்களை நோக்கி ஓடியது. அதை எடுத்து ஆற்றில் வீசிக்கொண்டே இருந்தது. இப்படி இரவு முழுவதும் அவர் அங்கேயே தங்கினார். இதனால் கற்களின் எண்ணிக்கை குறைந்தது.

பொழுதுவிடிய ஆரம்பித்தது. கதிரவன் அங்கு வெளிச்சத்தை கொடுக்க ஆரம்பித்தான். இரவு முழுவதும் தான் வீசிக்கொண்டிருந்த கற்கள் அங்கே ஒளி வீசியது. காரணம் அது சாதாரண கூழாங்கல் அல்ல. விலை உயர்ந்த வைரக்கல். இதைப்பார்த்தவரின் மனதில் இருள் படர்ந்தது. 'என்னடா இது. கைக்கு கிடைத்ததை அறியாமல் இப்படி சிந்தனையில் இருந்துவிட்டோமே' என வருத்தப்பட்டார்.

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலரும் அந்த வியாபாரியைபோலவே இருக்கிறோம். எப்படி என்று கேட்கிறீர்களா... கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம். எதிர்காலத்தை எண்ணி வியக்கிறோம். சரி நிகழ்காலத்தில் வேலை செய்கிறோமா என்றால் அதுவும் இல்லை. செக்குமாடு மாதிரி திரும்பத் திரும்ப ஒரே வேலையை ஆர்வம் இல்லாது செய்வதுதான் இதற்கு காரணம். நிகழ்காலத்தில் வாழுங்கள். வேலையை காதலியுங்கள்.






      Dinamalar
      Follow us