நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இன்று செய்யும் நன்மைகளே நாளை நற்பலன் தரும்.
* எதுவும் தானாக நடப்பதில்லை. முயற்சித்தால் மட்டுமே கிடைக்கும்.
* தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்யும்.
* எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர்.
* வயதுக்கு ஏற்ப அதிகமான நற்செயல்களை செய்பவரே சிறந்தவர்.
* உங்களை நல்லவர் என பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீங்கள் நல்லவரே.
* ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொண்டால் சுதந்திரமாக வாழலாம்.
* விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு இருக்கிறது.
* சொர்க்கத்தை அடைய விரும்பினால் பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள்.
* தன்னை அறிந்த மனிதன் இறைவனை அறிந்தவன் ஆவான்.
* சுகபோக நோக்கத்துடன் சேவையில் ஈடுபட்டால் அது களங்கத்தை உண்டாக்கும்.
- நபிகள் நாயகம்