sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பலன் தராத தர்மம்

/

பலன் தராத தர்மம்

பலன் தராத தர்மம்

பலன் தராத தர்மம்


ADDED : பிப் 05, 2014 10:21 AM

Google News

ADDED : பிப் 05, 2014 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மம் செய்வது நன்மையைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஹராமான (தடை செய்யப்பட்ட) வழியில் வரும் பணத்தினால் தர்மம் செய்வது எவ்வித பயனையும் தராது என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்போம்.

* ஒரு மனிதன் புனித ஹஜ் யாத்திரை செல்கிறான். இருகை ஏந்தி அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்கிறான். ஆனால், அவன் தடைவிதிக்கப்பட்ட ஆடையை அணிந்திருக்கிறான். தடை செய்யப்பட்ட உணவு வகையை சாப்பிடுகிறான். தடை செய்யப்பட்ட பானத்தை குடிக்கிறான். தடை செய்யப்பட்ட அநியாய வழிகளில் வந்த பணத்தில் வளர்ந்திருக்கிறான். இவனுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால் எப்படி ஏற்கப்படும்?

* ஒருவர் தடைசெய்யப்பட்ட வழியில் பொருளைத் தேடி அதைக் கொண்டு தர்மம் செய்தால் அதில் அவருக்கு எந்த நற்கூலியும் இல்லை. அந்த பாவச்சுமையை அவரே தாங்கிக் கொள்கிறார்.

* இப்படியெல்லாம் சொல்லும் அண்ணலார், இன்னும் ஒரு படி மேலாக, ''தடை செய்யப்பட்ட ஒரு உருண்டை உணவு, ஒருவனது வயிற்றை அடையுமானால், அவனுடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை,'' என்கிறார்கள்.






      Dinamalar
      Follow us