
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல குணம் படைத்த மனைவியே ஒருவருக்கு கிடைக்கும் சிறந்த செல்வம்.
* பொருளுக்காக ஆசைப்பட்டு ஒருபோதும் திருமணம் செய்யாதீர்.
* குறைந்த செலவில் செய்யும் திருமணமே இறையருளை பெற்றுத்தரும்.
* மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
* கெட்ட குணம் கொண்ட ஆயிரம் ஆண்களை விட, நல்ல குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.
* குழந்தைகளை சமமாக நடத்துங்கள்.
* வரவுக்கேற்ப செலவு செய்பவரும், நடுநிலையை பின்பற்றுபவரும் ஏழ்மை அடையமாட்டார்.
* உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை மட்டும் பாருங்கள்.
* போதும் என்ற மனம் படைத்திருப்பதே உண்மையான செல்வமாகும்.
* மகிழ்ச்சியாக வாழும்போது இறைவனை நினைத்தால், துன்பம் வரும்போது இறைவன் உன்னை நினைப்பான்.
- பொன்மொழிகள்

