ADDED : பிப் 16, 2022 10:57 AM

அ நிறம் | அளவு
* பதவி உங்களைத்தேடி வரும்போது பணிவாக இருங்கள்.
* அற்ப விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்.
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள்.
* உணவுப் பொருட்களை பதுக்காமல் மக்கள் தேவைக்கு விற்பனை செய்யுங்கள்.
* ஏழைகளுக்காக பாடுபடுபவர் இறைவனின் அன்புக்கு உரியவர்.
* ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல்.
* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.
* நதிக்கரையில் அமர்ந்திருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர்.
* விருந்தினர் வீட்டிற்கு வந்தால் அவர்களை உபசரியுங்கள்.
* கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள். அதன் உண்மையை பாருங்கள்.
- பொன்மொழிகள்
