ADDED : மே 04, 2017 03:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியின் கொடுமை பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
* மது அருந்துபவர், பெற்றோரைத் துன்புறுத்துவர் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்.
* மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடாது, மரணிப்பவர் சொர்க்கத்தின் பானத்தை அருந்தமாட்டார்.
* மதுவே ஒரு நோயாக இருக்கும்போது, அது வேறு ஒரு நோய்க்கு எப்படி மருந்தாக அமையும்.
* மது இறக்குவோர், இறக்க வைப்போர், அருந்துபவர், அருந்தச் செய்வோர், மதுவை எடுத்துச் செல்வோர், எடுத்து வரச் செய்பவர், விற்பனை செய்பவர், தனக்காக வாங்குபவர், மற்றவருக்காக வாங்குபவர், மதுத்தொழில் நடத்துவர் ஆகியோரை நான் சபிக்கிறேன்.
* ஒருவன் மது அருந்திய நிலையில் அவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். கவுத்தா என்றால் விபச்சாரிகளின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்.