sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

இருக்கிறது ஒரு மந்திரம்

/

இருக்கிறது ஒரு மந்திரம்

இருக்கிறது ஒரு மந்திரம்

இருக்கிறது ஒரு மந்திரம்


ADDED : அக் 14, 2016 04:20 PM

Google News

ADDED : அக் 14, 2016 04:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாம் வல்ல இறைவனை திக்ரு செய்பவரா (நினைவு கொள்பவர்) நீங்கள்?

அப்படியானால் உங்களுக்கு பல சுகங்கள் தேடி வரும் என்பதில் ஐயமில்லை. நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.

* எவர் நாற்பது நாட்கள் பரிசுத்தமான மனதுடன் அல்லாஹ்வை தியானம் புரிகின்றாரோ, அவரது இதயத்தில் இருந்து புறப்படும் ஞானஊற்று நாவின் வழியே வெளிப்படும்.

* மெல்லிய பஞ்சணை படுக்கையில் படுத்துக் கொண்டே நினைவு கொள்பவர்களையும் அல்லாஹ் சொர்க்கத்தில் உன்னதமான ஸ்தானத்தில் நுழையச் செய்கின்றான்.

* அல்லாஹ்வின் நினைவு இதயங்களின் அழுக்கைப் போக்குகின்றது.

* அல்லாஹ்வை நினைவு கொள்பவனுக்கும், கொள்ளாதவனுக்கும் உரிய வேறுபாடு உயிர் உள்ளவனுக்கும், மரணித்தவனுக்கும் சமமானதாகும்.

* காலை தொழுகைக்கு(சுப்ஹு) பின்னும், மாலை தொழுகைக்கு(மஃரிப்) பின்னும் அல்லாஹ்வை நினைப்பவருக்கு தண்டனை தர அல்லாஹ் வெட்கப்படுகின்றான். அவன் பாவியானாலும் சரியே!

* அல்லாஹ்வை நினைவு கொள்பவரின் முகத்தில் பல விதமான ஒளிப்பிரகாசம் ஏற்படுகிறது.

* இறைநினைவு இதயநோய்களுக்கு மருந்தாகும்.

* அல்லாஹ்வை நினைவு கூர்பவர் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் (ஆசி) வானவர்களின் ஸலவாத்தும் (பிரார்த்தனை) ஏற்படுகின்றன.






      Dinamalar
      Follow us