ADDED : அக் 14, 2016 04:20 PM

எல்லாம் வல்ல இறைவனை திக்ரு செய்பவரா (நினைவு கொள்பவர்) நீங்கள்?
அப்படியானால் உங்களுக்கு பல சுகங்கள் தேடி வரும் என்பதில் ஐயமில்லை. நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
* எவர் நாற்பது நாட்கள் பரிசுத்தமான மனதுடன் அல்லாஹ்வை தியானம் புரிகின்றாரோ, அவரது இதயத்தில் இருந்து புறப்படும் ஞானஊற்று நாவின் வழியே வெளிப்படும்.
* மெல்லிய பஞ்சணை படுக்கையில் படுத்துக் கொண்டே நினைவு கொள்பவர்களையும் அல்லாஹ் சொர்க்கத்தில் உன்னதமான ஸ்தானத்தில் நுழையச் செய்கின்றான்.
* அல்லாஹ்வின் நினைவு இதயங்களின் அழுக்கைப் போக்குகின்றது.
* அல்லாஹ்வை நினைவு கொள்பவனுக்கும், கொள்ளாதவனுக்கும் உரிய வேறுபாடு உயிர் உள்ளவனுக்கும், மரணித்தவனுக்கும் சமமானதாகும்.
* காலை தொழுகைக்கு(சுப்ஹு) பின்னும், மாலை தொழுகைக்கு(மஃரிப்) பின்னும் அல்லாஹ்வை நினைப்பவருக்கு தண்டனை தர அல்லாஹ் வெட்கப்படுகின்றான். அவன் பாவியானாலும் சரியே!
* அல்லாஹ்வை நினைவு கொள்பவரின் முகத்தில் பல விதமான ஒளிப்பிரகாசம் ஏற்படுகிறது.
* இறைநினைவு இதயநோய்களுக்கு மருந்தாகும்.
* அல்லாஹ்வை நினைவு கூர்பவர் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் (ஆசி) வானவர்களின் ஸலவாத்தும் (பிரார்த்தனை) ஏற்படுகின்றன.