ADDED : நவ 18, 2016 12:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
“ஆறு குழுவினரை நான் சபிக்கிறேன். ஏனெனில் அல்லாஹ் அவர்களை சபிக்கிறான்,” என்று நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.
* அல்லாஹ்வின் குர்ஆன் கருத்துக்களை திரித்து அதிகப்படுத்துபவர்.
* அல்லாஹ்வின் கத்ரை (விதித்த விதி) பொய்ப்படுத்துபவர்.
* அடக்குமுறையாக ஆட்சியைப் பெறுபவர்.
* ஹரம் ஷரீபை (மெக்காவிலுள்ள முகர்ரமாவில் வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற தடை செய்யப்பட்ட செயல்கள்) ஹலாலாக
(நியாயம்) கருதுபவர்.
* என்னுடைய சந்ததியினர்களில் அல்லாஹ் ஹராம் (நியாயமற்றது) ஆக்கியதை ஹலாலாக கருதுபவர்.
* எனது வழிமுறைகளை விட்டு விலகியிருப்பவர்.
இந்த ஆறு பிரிவினரும் இறைவனின் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று அவர் கூறுகிறார்