
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகம் உதிர்க்கும் பொன்மொழிகளை கேளுங்கள்.
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட, இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்.
* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட, உங்களில் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.
* நீங்கள் உயிருடன் வாழப்போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* உப்பை நீர் கரைப்பது போல, நற்குணம் பாவங்களைக் கரைத்து விடும். கள்ளின் மண்டி, தேனைக் கெடுத்து விடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களை கெடுத்து விடும்.
* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது, இவ்வுலகையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ, அவர் என்னைத் துன்புறுத்தியவர் ஆவார்.