
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மம் செய்தால் உங்களது சந்ததியும் நலமாக வாழும்.
* நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமா... பிறருக்கு உதவுங்கள்.
* நோய்களில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள்.
* கஞ்சனாக இருக்காதீர்கள். அது யாருக்கும் பயன்தராது.
* அனாதைகள், ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்.
* எளிமை என்பது இறைநம்பிக்கையின் அடையாளம்.
* உங்களை புகழ்ந்து பேசும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி நில்லுங்கள்.
* கவுரவத்திற்காக ஆடம்பர உடை வேண்டாம்.
* உண்மையை மறைத்து பொய் கூறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை.
* பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.
* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.
* வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான்.
* ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
- பொன்மொழிகள்

