
* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.
* உங்களிடம் நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள்.
* எந்த பிரச்னையையும் நிதானமாகக் கையாளுங்கள்.
* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
* நல்ல செயல்களை செய்யுங்கள். தீய செயல்களை கைவிடுங்கள்.
* நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும்.
* ஒழுக்கமுள்ளவராக இருங்கள். மக்களில் நீங்களே சிறந்தவர்.
* நீங்கள் எதனை விரும்புகிறீர்களோ அதையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.
* ஒரு செயலை செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாருங்கள்.
* போதுமென்ற மனதுடன் இருங்கள். மக்களில் நீங்களே நன்றியுள்ளவர்.
* மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
* தவறு செய்தவன் சாபத்திற்குரியவனாவான்.
* பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்யும் தலைவன் சுவர்க்கம் நுழையமாட்டான்.
* பொய்யான விஷயத்தை பிறரிடம் உண்மை என்று கூறுவதும் மோசடியாகும்.
* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
- பொன்மொழிகள்

