நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூன்று செயல்களை செய்தால் நலமாக வாழலாம்.
1. தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை வேண்டுமென பிரார்த்திப்பவருக்கு பிறரது உதவி கிடைக்கும். சுயநலத்துடன் இருப்பவருக்கு யாரும் உதவ மாட்டார்கள்.
2. புதிய முயற்சியில் ஈடுபடும் முன் நிறை, குறைகளை யோசியுங்கள். ஆழம் தெரியாமல் கால் வைத்து விட்டு அவதிப்படாதீர்.
3. இரண்டு நபர் அல்லது குடும்பம் இடையே பிரச்னை வரும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள்.