நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறப்புக்கு பின் இறைவன் முன் கொண்டு செல்லப்பட்ட ஒருவரிடம், 'ஆதமின் மகனே.... நான் ஒருமுறை தண்ணீர் கேட்டேன். ஆனால் தரவில்லையே' எனக் கேட்டான்.
'உலகின் அதிபதி நீ. எப்படி நான் உனக்கு தண்ணீர் தருவேன்' என்றார் அவர்.
அப்போது அவன் தன்னுடைய அடியவர் ஒருவரின் பெயரைச் சொல்லி, 'இந்த நபர் இந்த நாளில் உன்னிடம் தண்ணீர் கேட்டார். ஆனால் நீ தரவில்லை' என்றான்.
அவருக்கு அது நினைவுக்கு வந்தது. அப்போது இறைவன், 'தண்ணீர் கொடுத்திருந்தால் இப்போது என்னிடத்தில் கருணை கிடைத்திருக்கும்' என்றான்.
தாகத்திற்கு தண்ணீர் கேட்பவருக்கும், பசிக்கு உணவு கேட்பவருக்கும் உதவி செய்யுங்கள்.