ADDED : மே 10, 2024 12:24 PM
அ நிறம் | அளவு
அபூசுப்யானின் மனைவி ஒருமுறை நபிகள் நாயகத்தை சந்தித்து, ''என் கணவர் கஞ்சனாக இருப்பதால் அடிப்படைத் தேவைக்கு கூட பணமின்றி கஷ்டப்படுகிறேன். கணவருக்குத் தெரியாமல் திருடுவதைத் தவிர வேறுவழி இல்லை'' என வருந்தினாள்.
அதற்கு அவர், ''மனைவி, குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது கணவரின் கடமை'' என்றார். மேலும் அவர், 'இறைவன் வழங்கிய செல்வத்தை குடும்பத்தினருக்கு செலவு செய்வதே சிறந்த தர்மம்' என்றார்.
