நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரச்னை என்பது இயல்பான விஷயம். ஆனால் சிலர் அதற்கான தீர்வைத் தேடாமல் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர தற்கொலை கூடாது என்கிறது இஸ்லாம்.
* உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். இறைவன் உங்கள் மீது அளப்பரிய கருணை கொண்டவனாக இருக்கிறான்.
* எந்தப் பொருளைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறாரோ மறுமையில் அந்த பொருளால் அவர் வேதனைக்கு ஆளாக நேரிடும்.
* இரும்பைக் கொண்டு தற்கொலை செய்தால் நரகத்தில் அந்த இரும்பாலேயே வயிற்றில் குத்திக் கொள்ள நேரிடும்.
* விஷம் அருந்தினால் மறுமையிலும் அந்த விஷத்தைக் குடிக்கும் கட்டாயம் ஏற்படும்.