ADDED : மே 02, 2023 03:02 PM
'கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார்' என சொல்லும் அளவுக்கு, இன்று திருமணச் செலவு அதிகமாகிவிட்டது. விலை உயர்ந்த அழைப்பிதழ், பரிசுப் பொருட்கள், தேவையற்ற அலங்காரங்கள், வாண வேடிக்கைகள், வகைவகையான உணவுகள் என வரிசைகள் நீளுகின்றன. இதை பார்த்து மற்றவர்களும் இதபோல் செய்ய விரும்பி, கடன் வாங்குகின்றனர். அது மட்டும் இல்லை. ஆடம்பரமாக திருமணம் நடத்தினால் இரு வகையான பாவங்களைச் சுமக்க நேரிடும்.
1. வீண் (இஸ்ராப்) செலவு செய்வது
2. மற்றவர்களையும் செலவு செய்யும்படித் துாண்டுவது
எனவே எளிய முறையில் திருமணம் நடத்துங்கள். இதனால் சிக்கனமாக செய்ததற்கும், வசதி இருந்தும் எளிமையாக நடத்தி பிறருக்கு வழிகாட்டியதற்கும் என இரண்டு நன்மை கிடைக்கும். கூடவே நன்மதிப்பையும் பெற்றுத் தரும். முக்கியமாக திருமண விருந்தின் செலவை மணமகனே ஏற்க வேண்டும்.

