ADDED : நவ 12, 2017 04:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவினரோ, நண்பரோ நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கலாம். அவரைக் காணச் செல்லும் ஒருவர், “இப்படித்தான், என் மாமாவுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு! மருத்துவமனையில் சேர்த்த அடுத்த நிமிடமே இறந்துட்டாரு,” என்று பயமுறுத்தும் வகையில் பேசுவது, “இந்த நோய் குணமாகுறது ரொம்ப கஷ்டமாச்சே, இதுக்கு மருந்தே கிடையாதுன்னு சொல்றாங்களே,” என்றும் நம்பிக்கையைக் குலைக்கும் வார்த்தைகளை பேசக்கூடாது.
நோயாளி விரும்பினால் மட்டுமே அவருடன் பேசலாம். மற்றபடி நலம் விசாரித்து, விரைவில் அவர் குணமடைய இறைவனை வேண்டுவதாகச் சொல்லி திரும்ப வேண்டும்.
“நோயாளியை நலம் விசாரிக்க செல்லும்போது, கூச்சல் போடாமல் இருப்பதும், நோயாளியின் அருகில் சிறிது நேரமே உட்காருவதும் சிறந்த நடைமுறை,” என்கிறார் நபிகள் நாயகம்.