sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

அக்கம் பக்கம்

/

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்


PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டம் ஆரம்பம்!

'என்ன இருந்தாலும், ஒரு முன்னாள் முதல்வரை இவ்வளவு அவமதிக்கக் கூடாது...' என, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி பரிதாபத்துடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

ஆந்திர சட்டசபையில் மொத்தம் உள்ள, 175 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி, 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், ஜெகன்மோகனும் அடக்கம்.

விதிகளின்படி, மொத்த தொகுதிகளில் குறைந்தது, 10 சதவீதமாவது வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியும். அதே நேரம், ஆளுங்கட்சி மனது வைத்தால், குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்கலாம்.

ஆனால், தற்போது இந்த பதவியை ஜெகன்மோகனுக்கு கொடுக்க, சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் கடுப்பான ஜெகன், 'இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வேன்...' என, தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியினரோ, 'அவர், முதல்வராக இருக்கும்போது எங்களை எவ்வளவு அவமதித்தார். எங்கள் ஆட்டம் இப்போது தான் ஆரம்பம்; பொறுத்திருந்து பாருங்கள்...' என்கின்றனர்.






      Dinamalar
      Follow us