sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

'வருமானம் யாருக்கு வரணும்?'

/

'வருமானம் யாருக்கு வரணும்?'

'வருமானம் யாருக்கு வரணும்?'

'வருமானம் யாருக்கு வரணும்?'


PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, காந்திபுரம் பகுதியில், 167.25 கோடி ரூபாய் செலவில், செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்து, பூங்காவில் அமைய உள்ள அரங்குகள், 'பார்க்கிங்' மற்றும் கட்டடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பூங்காவில் அமைய உள்ள அரங்கு பணிகள் குறித்து கேட்ட பின், 'இதில், தியேட்டர், மால் போன்ற அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். அதில், நமக்கும் வருமானம் வரணும்' என்று, மாநகராட்சி கமிஷனரான சிவகுருபிரபாகரனிடம் தெரிவித்தார்.

இதை கேட்ட மாநகராட்சி ஊழியர் ஒருவர், 'யாருக்கு வருமானம் வரணும் என்கிறார் அமைச்சர்... நமக்கு என்றால், அரசியல்வாதிகளுக்கா இல்லை அரசுக்கா?' என மெதுவாக முணுமுணுக்க, அருகில் இருந்த கட்சி தொண்டர், அவரை முறைத்தபடியே, 'அரசுக்கு வருமானம் வரட்டும்னு தான் அமைச்சர் சொல்றாரு...' எனக் கூற, ஊழியர் சத்தமின்றி நழுவினார்.

-***






      Dinamalar
      Follow us