sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

ஒளிமயமான எதிர்காலம்!

/

ஒளிமயமான எதிர்காலம்!

ஒளிமயமான எதிர்காலம்!

ஒளிமயமான எதிர்காலம்!


PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'எங்கள் கட்சியில் ஒவ்வொரு காலத்திலும், குறிப்பிட்ட தலைவரின் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். இப்போது, இவரது கொடி பறக்கிறது...' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறித்து வயிற்றெரிச்சலுடன் பேசுகின்றனர், சக அமைச்சர்கள்.

இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். தற்போது ரயில்வே மட்டுமல்லாது, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கும் அமைச்சராக உள்ளார். நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால், இவரிடம் இந்த முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார், பிரதமர் மோடி.

இதற்கு முன், பா.ஜ., தலைமையிலான மத்தியஅமைச்சரவை கூட்டத்தில்எடுக்கப்படும் முடிவுகளைசெய்தியாளர்களுக்கு சொல்லும் பணி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, பியுஷ் கோயல் ஆகியோருக்கு தரப்பட்டுஇருந்தது.

சமீப காலமாக இந்த பணியைச் செய்பவர் அஸ்வினி வைஷ்ணவ். மற்றவர்களை போல, 'மைக்' முன் அமர்ந்து செய்தியாளர்களுக்கு இவர் விளக்கம் சொல்வது இல்லை.

மிகப்பெரிய டிஜிட்டல் திரையில் அமைச்சரவையின்முக்கிய முடிவுகள் குறித்த விபரங்கள் ஒளிரும். அவற்றை சுட்டிக்காட்டி, வகுப்பறையில் ஆசிரியர்கள்பாடம் நடத்துவதுபோல், நின்றபடியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து அசத்துகிறார், வைஷ்ணவ்.

'இன்னும் சில மாதங்களில் மத்திய அமைச்சரவையில் இவருக்கு மேலும் முக்கியத்துவம்கிடைக்கும் போலிருக்கிறது. இவருக்கு ஒளிமயமானஎதிர்காலம் காத்திருக்கிறது...' என, சக அமைச்சர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.






      Dinamalar
      Follow us