sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

'பார்க்கிங்'காக மாறிய அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்

/

'பார்க்கிங்'காக மாறிய அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்

'பார்க்கிங்'காக மாறிய அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்

'பார்க்கிங்'காக மாறிய அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்


PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இரும்புலியூரில் இருந்து வந்து ஏறும் போது, மேம்பாலத்தில் கீழ் உள்ள அணுகு சாலை, தற்போது வாகன நிறுத்தமாக மாறி வருகிறது.

தாம்பரத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருவோர், தங்களின் கார், இருசக்கர வாகனங்களை, சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நிறுத்திச் செல்கின்றனர்.

அந்த வகையில், பல மீட்டர் துாரத்திற்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அச்சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எதிரெதிரே வரும் வாகனங்கள் கடக்க வழியின்றி, நீண்ட நேரம் நெரிசல் தொடர்கிறது.

'அணுகு சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது; மீறி நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து போலீஸ் சார்பில், எச்சரிக்கை பலகை வைத்தும், வாகன ஓட்டிகள் அதை மதிக்கவில்லை.

அதே நேரத்தில், அறிவிப்பு பலகை வைத்ததோடு, போலீசார் அதை கண்டுகொள்ளவும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், அணுகு சாலை முழுதும் தனியார் வாகன பார்க்கிங் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது.

போலீஸ் உயர் அதிகாரிகள், இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us