sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

இரட்டை நிலைப்பாடு!

/

இரட்டை நிலைப்பாடு!

இரட்டை நிலைப்பாடு!

இரட்டை நிலைப்பாடு!


PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அரசியல் ரீதியான முக்கிய பிரச்னைகளில் கட்சி நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது சகஜம் தான். ஆனால், சின்ன சின்ன பிரச்னைகளில் கூட கருத்து வேறுபாடு எழுந்தால், எப்படி கட்சி நடத்துவது...' என, கவலை தெரிவிக்கின்றனர், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பாகிஸ்தானுக்கு எதிரான , 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் விமர்சித்த நிலையில், அந்த கட்சியின் எம்.பி., சசி தரூர், மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்; இது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால், யாரும் பெரிது படுத்தவில்லை.

ஆனால், டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்த ரவு பிறப்பித்தது. இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்களும், கட்சியின் மேலிட தலைவர்களுமான ராகுல், பிரியங்கா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'வாயில்லா ஜீவன்கள் எங்கு போகும்...' என, ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அதே நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 'தெரு நாய்களை நகரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்...' என்றும் குரல் எழுப்பினார்.

காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'எல்லா விஷயத்திலுமே நம் கட்சியில் இரட்டை நிலைப்பாடு இருந்தால் என்ன செய்வது...?' என, புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us