sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

உண்மை பேசினால் தப்பா?

/

உண்மை பேசினால் தப்பா?

உண்மை பேசினால் தப்பா?

உண்மை பேசினால் தப்பா?


PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கட்சி நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்...' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு அறிவுரை கூறியுள்ளனர், அவரது ஆதரவாளர்கள்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீப காலமாக, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷின் தலைமைக்கு சவால் விடும் வகையில், கட்சி நிர்வாகிகள் சிலர் செயல்படுவது, அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

சமீபத்தில், இவரது கட்சியின் எம்.எல்.ஏ., பூஜா பால், சட்டசபையில் பேசுகையில், 'உ.பி., ரவுடிகளின் கூடாரமாக இருந்தது. இப்போது நிலைமை மாறி விட்டது . குற்றவாளிகளை முதல்வர் யோகி ஒடுக்கி விட்டார். முழு மாநிலமும் அவரை நம்பிக்கையுடன் பார்க்கிறது...' என்றார்.

பூஜாவின் இந்த பேச்சை, சட்டசபையில் இருந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர்; ஆனால், சமாஜ்வாதி கட்சியினரின் முகங்கள் இருண்டு விட்டன.

'கட்சிக்குள்ளேயே கலகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தால், அப்புறம் உங்களுக்கு மரியாதையே இருக்காது...' என, அகிலேஷிடம் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து, கட்சியில் இருந்து பூஜாவை அதிரடியாக நீக்கினார், அகிலேஷ் யாதவ்.

பா.ஜ.,வினரோ, 'பூஜா உண்மையைத்தானே பேசினார்; அகிலேஷுக்கு ஏன் எரிச்சல் வருகிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us