sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

தேவையா இந்த பதவி?

/

தேவையா இந்த பதவி?

தேவையா இந்த பதவி?

தேவையா இந்த பதவி?


PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முதல்வர் பதவி என்பது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்காது போலிருக்கிறதே...' என புலம்புகிறார், உத்தரகண்ட் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான புஷ்கர் சிங் தாமி.

கடந்த 2021ல் உத்தரகண்ட் பா.ஜ.,வில் கடுமையான அரசியல் குழப்பம் நிலவியது. முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக புஷ்கர் சிங் தாமி, முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

இதன்பின், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றும், முதல்வர் வேட்பாளரான புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். ஆனாலும், பா.ஜ., மேலிடம் அவர் மீது நம்பிக்கை வைத்து, அவரையே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தியது.

அதன்பின் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றார். முதல்வர் பதவியில் மீண்டும் அமர்ந்து, மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாநில அரசில் எட்டு அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இதனால், 58க்கும் மேற்பட்ட துறைகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமியே கவனித்து வருகிறார். கடும் பணிச்சுமையால் தவித்து வரும் அவர், அமைச்சரவையை விரிவுபடுத்த அனுமதிக்கும்படி அடிக்கடி டில்லி சென்று, பா.ஜ., தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், பா.ஜ., தலைமையிடம் இருந்து இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், 'இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் இந்த முதல்வர் பதவி தேவையா...' என, தன் ஆதரவாளர்களிடம் புலம்புகிறார், புஷ்கர் சிங் தாமி.






      Dinamalar
      Follow us