sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

சிறை நிச்சயம்!

/

சிறை நிச்சயம்!

சிறை நிச்சயம்!

சிறை நிச்சயம்!


PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அதிகாரிகளை எப்போதும் நம்பக் கூடாது. சரியான நேரம் பார்த்து காலை வாரிவிடுவர்...' என விரக்தியுடன் கூறுகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார்.

அப்போது, ஆந்திராவில் மதுபான கொள்கை வகுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், இதில், 3,200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும், ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசகராக பதவி வகித்த மூத்த அதிகாரி காசிரெட்டி என்பவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் அளித்த வாக்குமூலத்தில், 'மாநில அரசுக்கு அதிக வருவாய் வர வேண்டும். அதே நேரத்தில், எங்கள் கட்சிக்கும் அதிக நிதி வர வேண்டும். இதற்கு தகுந்த மாதிரி ஒரு மதுபான கொள்கையை வகுக்க வேண்டும்' என, தனக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டியை இந்த வழக்கில் சேர்த்து, அவரை விசாரணைக்கு உட்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர். அடுத்த கட்டமாக அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் மூக்கை நுழைக்கும் என தெரிகிறது.

இதனால், கலக்கம் அடைந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, 'என்னை சிறைக்குள் தள்ளாமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது...' என புலம்புகிறார்.






      Dinamalar
      Follow us