sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

இது நல்லதுக்கு இல்லை!

/

இது நல்லதுக்கு இல்லை!

இது நல்லதுக்கு இல்லை!

இது நல்லதுக்கு இல்லை!


PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இவர்களது பஞ்சாயத்து எதில் போய் முடியும் என தெரியவில்லை...' என, மேற்கு வங்க கவர்னர் அனந்த போஸ், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கு இடையேயான மோதல் பற்றி கவலைப்படுகின்றனர், அந்த மாநில மக்கள்.

கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

மாநில அரசின் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவதாக, மம்தா புகார் கூறி வருகிறார். 'கவர்னருக்கு உரிய மரியாதையை மாநில அரசு கொடுப்பது இல்லை' என, அனந்த போஸ் கூறுகிறார்.

இந்நிலையில், மாநில அரசின் ஆலோசனையை கேட்காமல், பல்கலைகளுக்கான துணைவேந்தர்களை கவர்னர் நியமித்ததாக, மம்தா கூறினார். ஆனால், அதை அவர் பொருட்படுத்த வில்லை.

இதையடுத்து, தன் அரசியல் வேலையை காட்டத் துவங்கியுள்ளார், மம்தா. கவர்னரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களை வளைத்து, அவர்கள் பதவியிலிருந்து விலகினால், அரசியலில் பெரிய பதவி தருவதாக ஆசை காட்டத் துவங்கியுள்ளார்.

மம்தாவின் வியூகம் ஓரளவுக்கு வெற்றியை தந்துள்ளது. ஜாதவ்பூர் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர், திரிணமுல் கட்சியினருடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அவரை, அவசரம் அவசரமாக பதவியிலிருந்து நீக்கியுள்ளார், கவர்னர். இதைப் பார்த்த மேற்கு வங்க பொதுமக்கள், 'அரசியலை கடந்து, கல்வி நிலையங்களிலும் இவர்கள் மோதல் நீண்டு விட்டது. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை...' என, கவலைப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us