sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

மாறாத மனம்!

/

மாறாத மனம்!

மாறாத மனம்!

மாறாத மனம்!


PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் இப்படித் தான் நடக்கும்...' என, ஆந்திரா துணை முதல்வரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு திரைப்பட உலகின் அதிரடி ஹீரோவான பவன் கல்யாண், அரசியலுக்கு வந்து, துணை முதல்வரான பின்னும், தன் அதிரடியை கைவிடவில்லை.

துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் ஏறி, அவற்றில் போதை பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்வது, அதிகாரிகளிடம் தடாலடியாக பேசுவது என, சினிமாவில் நடிப்பது போலவே நிஜ வாழ்விலும் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், பவன் கல்யாண் கட்சியினர், அவருக்கு மிகப் பெரிய வாளை பரிசாக கொடுத்தனர். அதை வாங்கிய பவன் கல்யாண், சினிமாவில் வில்லனிடம் சண்டை போடுவது போல் சுழற்றினார்.

அந்த வாள், பவன் கல்யாணின் பின்புறம் நின்றிருந்த, அவரது பாதுகாவலரின் மூக்கின் அருகே சென்றது. நல்ல வேளையாக, பாதுகாவலர் விலகியதால், அவரது மூக்கு தப்பியது. ஆனால், இது பற்றி எந்த கவலையும் இல்லாமல், பவன் கல்யாண், நிகழ்ச்சியை தொடர்ந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியானதை பார்த்த ஆந்திர மக்கள், 'நடிகர்கள், அரசியல்வாதியாக மாறி பதவியில் அமர்ந்து விட்டாலும், மனதளவில் இன்னும் நடிகர்களாகவே இருக்கின்றனரே...' என, புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us