sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

யாருக்கு கிடைக்கும் பதவி?

/

யாருக்கு கிடைக்கும் பதவி?

யாருக்கு கிடைக்கும் பதவி?

யாருக்கு கிடைக்கும் பதவி?


PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஒரு பதவிக்கு இத்தனை பேர் ஆசைப்பட்டால் எப்படி...' என, ஆச்சரியப்படுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.

துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த வாரம் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ., மேலிட தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே, இந்த ராஜினாமாவுக்கு காரணம் என, டில்லியில் பேசப்படுகிறது.

ஆனால், பா.ஜ.,வில் உள்ளவர்களோ, 'நீதித்துறையுடன் ஜக்தீப் தன்கர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டதே பிரச்னைக்கு காரணம்...' என்கின்றனர்; எப்படியோ, துணை ஜனாதிபதி பதவி காலியாகி விட்டது. விரைவில், புதிய துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட உள்ளார்.

பார்லிமென்டில், கட்சிகளுக்கு இப்போதுள்ள பலத்தின் அடிப்படையில், பா.ஜ., தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்.

இதனால், துணை ஜனாதிபதி பதவியை பிடிக்க, தே.ஜ., கூட்டணிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. 'பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமாருக்கு தான் வாய்ப்பு' என, சிலர் பேசுகின்றனர்.

அதே நேரம், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களான முக்தர் அப்பாஸ் நக்வி, வசுந்தரா ராஜே சிந்தியா, சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட அரை டஜன் தலைவர்கள், துணை ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'துணை ஜனாதிபதியாவதற்கு ஆயிரம் பேர் ஆசைப்படலாம்; ஆனால், யாருமே எதிர்பாராத ஒருவரைத் தான், பா.ஜ., மேலிடம் தேர்வு செய்யும்...' என்கின்றனர் , டில்லி அரசியல்வாதிகள்.






      Dinamalar
      Follow us