PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரிய ஒளி மின்சாரம் எப்படி
சூரிய ஒளி பேனல்களில் 'போட்டோ வோல்டிக்' செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மீது சூரிய ஒளி படும்போது எலக்ட்ரான்கள் வெளிப்பட்டு மின்சாரம் உருவாகிறது. இந்த செல்கள் மழைநீர் பட்டால் நாளடைவில் செயல்திறன் குறையக்கூடும். தவிர பறவை எச்சம், இலை என பலவும் விழும். இதைத் தடுக்க, அந்த செல் மீது கண்ணாடியை பதிக்கின்றனர். இந்த கண்ணாடி மீது படியும் துாசியை அவ்வப்போது துடைக்காவிட்டால் சூரிய ஒளி படும் அளவு குறையும். இதனால் மின்சார உற்பத்தியும் குறையும். இதை தவிர்க்க சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம்.