PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணு ஆயுத போரின் ஆபத்து
உலக நாடுகளிடையே போர் அதிகரிக்கிறது. ஒருவேளை பெரிய அளவில் அணு ஆயுத போர் ஏற்பட்டால், உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். இது 7 - 8 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவர் என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும் அணு குண்டுகள் வெடித்தால் மேல் எழும்பும் புகை, துாசி உள்ளிட்டவை வளிமண்டத்தில் சேர்ந்து, சூரிய ஒளி திறனை மாதக்கணக்கில் குறைத்து விடும். மேலும் அணுஆயுதத்தால் வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைடு, வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தை பாதிக்கும்.