PUBLISHED ON : மார் 21, 2026 11:47 PM

அ நிறம் | அளவு
பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 2050க்குள் ஆண்டுக்கு 4.70 - 7 லட்சம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது என அர்ஜென்டினாவின் கத்தோலிக் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. 2000 - 2022ல் 156 நாடுகளின் வெப்பநிலை தகவல்களை இக்குழு ஆய்வுக்கு எடுத்தது. 2050க்குள் உலக சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியசை தாண்டும்போது, ஒவ்வொரு கூடுதல் மாதத்துக்கும் உடல் உழைப்பு இல்லாதோர் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரிக்கும். இது அவர்களின் முன்கூட்டி மரணத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
