PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மனிதன் - நாய்' பந்தத்தின் வரலாறு
உலகளவில் வளர்ப்பு பிராணிகளில் முக்கியமானது நாய். நகரம், கிராமம் வித்தியாசமின்றி வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இவை நன்றி உள்ள விலங்கு மட்டுமல்ல; வீடுகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதால் இதை வளர்க்க பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மனிதர்கள் - நாய்கள் இடையிலான நட்பு பற்றி நடத்திய ஆய்வில், இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என அந்நாட்டின் அரிஜோனா பல்கலை தெரிவித்துள்ளது. அலெஸ்கா நகரில் நடத்திய தொல்லியல் துறை ஆய்வு மூலம் இது கண்டறியப்பட்டது.

