உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 11, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பனி இல்லாத நாடுகள்
பூமியின் வட, தென் துருவங்களுக்கு இடையே, நடுப்பகுதியில் பூமியைச் சுற்றி வரும் ஒரு கற்பனைக் கோடு தான் நிலநடுக்கோடு. இதன் அருகிலுள்ள கொலம்பியா, பிரேசில், உகாண்டா, மாலத்தீவு, இந்தோனேஷியா, கிரிபாதி உள்ளிட்ட நாடுகளில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி கிடைப்பதால் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும். இதனால் இப்பகுதிகளில் பனிப்பொழிவு இருக்காது. பனி என்பது மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் உறைந்து பனிக்கற்களாக மாறும்போது உருவாகிறது. வெப்பநிலை குறைவாக இருக்கும்போது மட்டுமே இது நிகழும்.
