PUBLISHED ON : ஜன 29, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
பெரிய பவளப்பாறை
உலகின் பெரிய பவளப்பாறை அமெரிக்காவில்கண்டுபிடிக்கப்பட்டது. புளோரிடாவின் மியாமில் இருந்து தெற்கு கரோலினாவின் சார்லஸ்டன் வரை இந்த பவளப்பாறை உள்ளது. இதன் நீளம் 500 கி.மீ. அகலம் 110 கி.மீ. நிலத்தில் இருப்பது போலவே கடலிலும் பல்லுயிரி அமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பவளப்பாறைகள் முக்கியமானது. 'பவளம்' எனும் ஒரு வகை கூட்டுயிரிகள் சுரக்கும் சுண்ணாம்பு பிணைப்புகளால், பவளப்பாறைகள் உருவாகின்றன. பார்ப்பதற்கு அழுத்தமான சுண்ணாம்பு செடிகளின் தொகுப்பு போல இவை இருக்கும்.
தகவல் சுரங்கம்
தேசிய பத்திரிகை தினம்
ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை.உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது.மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம். இந்தியாவில் முதன்முதலாக 'ஹிக்கிஸ் பெங்கால் கெஜட்' ஆங்கில வார இதழ் 1780 ஜன.29ல் ஆங்கிலேயர் ஜேம்ஸ் அகஸ்டஸ்ஹிக்கியால் கோல்கட்டாவில் தொடங்கப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜன.29ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.