உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
சோலைவனமாகும் பாலைவனம்
பாலைவனத்தை சோலைவனமாக்கும் விதமாக அங்கு மரங்களை வளர்க்கும் 'பசுமை பெருஞ்சுவர்' திட்டத்தை சீனா 48 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதன்படி அந்நாட்டின் கோபி, டக்லமக்கான் உள்ளிட்ட பாலைவனங்களில் இதுவரை 6600 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளது. மற்ற இயற்கை காடுகளை விட, இதன் இலை பரப்பு 66 சதவீதம் வேகமான விகிதத்தில் அதிகரித்தது என கண்டறியப்பட்டுள்ளது. 2050க்குள் மேலும் 3400 கோடி மரக்கன்றுகளை நட சீனா திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
