உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
தீவை உருவாக்கும் எரிமலை
மே மாத தொடக்கத்தில் நீருக்கடியில் வெடிக்கத் தொடங்கிய எரிமலையால் பசிபிக் தீவில், ஒரு தீவு உருவாகக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூகினியா வடக்கில் பிஸ்மார்க் கடல் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்தது. இதிலிருந்து வெளியான சாம்பல் புகை, கடல் நீர்மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரம் பரவியுள்ளது. மேலும் இது 'பியூமிஸ்' எனும் எரிமலை பாறையை வெளியிடுகிறது, அது கடலுக்குள் மிதந்து செல்கிறது. செயற்கைக்கோள் படங்களில் அரிதாகவே காணப்படும் ஒரு புவியியல் நிகழ்வான இது, புதிய தீவு உருவாக வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
