உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
இலை சுடுமா...
சுட்டெரிக்கும் வெயிலில் காகிதத்தையோ,உலோகத்தையோ சிறிதுநேரம் வைத்தால் விரைவில்சூடாகி விடுகிறது. ஆனால் எவ்வளவு வெயில் அடித்தாலும், மரத்தின் இலைகள் மட்டும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இலைகளிலுள்ள இலைத் துளைகள் தான். இலைத்துளைகள் மூலமாக எப்போதும் ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இலை பசுமையாக காணப்படுகிறது. மேலும் நீர் ஆவியாகி செல்லும்போது, இலைகளில் உள்ள ஓரளவு வெப்பத்தையும் எடுத்துச் செல்வதால் இலைகள் குளிர்ச்சியாக இருக்கின்றன.
