sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : செப் 06, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 06, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் பருமனை குறைக்க புதிய முறை



இரைப்பையின் அளவை குறைப்பதன்மூலமாக, உடல் எடையை நிரந்தரமாகக் குறைக்கும் பேரியாட்டிக் சிகிச்சை முறை தற்போது இந்தியாவில் பரவலாகி வருகிறது.இரைப்பையின் அளவு 250 மில்லிகிராம் உணவை மட்டுமே தக்க வைத்துக் கொள்கிறது.

இந்த பேரியாட்டிக் சிகிச்சை செய்த ஒரு வாரத்திற்கு பின், உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து விடும். சிறிதளவு உணவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த திருப்தி ஏற்படும்.இதனால் உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, உடலின் எடை குறைகிறது. இந்த முறையில் அறுவை சிகிச்சை மூலம், கொழுப்பு அகற்றப் படுவது இல்லை. உயரத்திற்கு ஏற்ப எடையளவு குறைந்த பின், அதே அளவு எடை பாதுகாக்கப் படுகிறது. இந்த புதிய பேரியாட்டிக் சிகிச்சை முறையில், பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இந்த சிகிச்சையில் உடல் எடையைக் குறைக்க கடுமையான முயற்சிகள் தேவை இல்லை.



தகவல் சுரங்கம்



ரகசிய அறைகள்



பழங்காலத்தில் கோயில்கள், அரண்மனைகளில் மேல்தளத்தில் அமைக்கப்படும் கட்டடங்களுக்கு ஒருவரும், தரைக்கு கீழே அமைக்கப்படும் ரகசிய அறைகளுக்கு மற்றொரு கட்டடக்கலை நிபுணரும் பொறுப்பு ஏற்பர்.தரைக்கு மேல் உள்ள கட்டடங்களை நிர்மாணித்த தலைமைச் சிற்பியின் பெயர் தான் கல்வெட்டில் வரும். ரகசிய அறைகளை நிர்மாணித்தவரின் பெயர் வரலாற்றில் வருவது இல்லை. இந்த ரகசிய அறைகள், கோயில்களில் கருவறையின் கீழ்தான் அமைக்கப்படும்.



ரகசிய அறைகளை அமைக்க கருங்கற்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கதவுகள் கூட கருங்கற்களாகவே இருக்கும். மரங்கள் மற்றும் பிற உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை. பார்ப்போருக்கு எவ்வித சந்தேகமும் வரக்கூடாது என்பதால், பிற உலோகங்கள் பயன்படுத்தப் படுவது இல்லை. ரகசிய அறைகள் சுரங்கப் பாதை களுடன் இணைப்பு பெற்று இருந்தன. கருவூலங் களாக மட்டுமின்றி, எதிரிகளின் படையெடுப்பின் போது தங்கும் இடங்களாகவும் ரகசிய அறைகள் இருந்தன.








      Dinamalar
      Follow us