உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 17, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் துாக்கமின்மை
உடல்நலனுக்கு துாக்கம் மிக அவசியம். இந்தியாவில் 54% பேர் துாக்கம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஒரே நேரத்தில் இல்லாமல் வெவ்வேறு நேரத்தில் துாங்குவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார்அமைப்பு, டில்லி, பெங்களூரு உட்பட 10 இடங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 1000 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில் 54 சதவீதம் பேர் துாக்கம் தொடர்பான பிரச்னை இருப்பதாகவும், ஆனால் துாங்கும் நேரத்தை ஒரே மாதிரி அமைத்துக் கொண்டால், அப்பிரச்னையிலிருந்து விடுபட முடிகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
