/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
உண்மையின் உரைகல்லாக சமரசமற்ற பயணம் தொடரட்டும்
/
உண்மையின் உரைகல்லாக சமரசமற்ற பயணம் தொடரட்டும்
PUBLISHED ON : நவ 22, 2025 12:00 AM

தமிழ் வாசகர் வட்டத்தில் தனக்கென தனித்துவத்துடன் 75வது பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழுக்கு, 'பாலிமர் டிவி' குழுமத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த, 1951ம் ஆண்டில், அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் துவங்கப்பட்டு, இன்று அச்சு ஊடக உலகில் ஆலமரம் போல, 'தினமலர்' தழைத்து நிற்க காரணம், அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் துவங்கி, இந்நாள் இயக்குனர்கள் வரையிலான அனைவருடைய அயராத உழைப்பு தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சாமானிய மக்களுக்கும் செய்தி வாசிக்கும் ஆர்வத்தை மேலோங்கச் செய்வதில் செய்திகளுக்கு எதுகை மோனையுடன் தினமலரிடும் தலைப்புகள் முக்கியமானவை. அவை வெறுமனே வார்த்தை ஜால வசனங்களாக இல்லாமல், அதிகாரத்தை நோக்கி அடித்தட்டு மக்கள் எழுப்பும் குரலின் எதிரொலிப்பாக இருந்துள்ளன.
தலைப்புகளாகட்டும், தலையங்கங்கள் ஆகட்டும், தினமலரின் வார்த்தைகள் வலிமை கொண்டவை. ஆன்மிக செய்திகள் முதல் அரசியல் செய்திகள் வரை, ஊடக நெறி பிறழாது தினம்தோறும் துணிச்சலுடன் அதிர்வுகளை ஏற்படுத்தும் கேள்விகளை எழுப்பும் தனிப்பாங்கு, அச்சு உலகில், தினமலருக்கே உரித்தானது என, வாசகர்கள் கூறும் வகையில், அதன் செயல்பாடு இருந்து வருகிறது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 'தினமலர்' வாசகன் நான் என்பதில் உள்ளபடியே பெருமை கொள்கிறேன்.
ஆன்மிகம் முதல் அரசியல் வரை, அனைத்து செய்திகளையும் ஒருசேர வழங்கும் அச்சு ஊடகமான 'தினமலர்', மென்மேலும் சிறப்படையவும், புதுப்புது உயரங்களைத் தொடவும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். உண்மையின் உரைகல்லாக சமரசமற்ற பயணம் தொடரட்டும்.
பி.வி.கல்யாணசுந்தரம்
மேலாண் இயக்குனர், 'பாலிமர் டிவி' குழுமம்.

