PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே குறவன்குளம் கிராமத்திற்கு தேர்தலுக்குப் பின் 3 மாதங்களாக அரசு பஸ் இயக்கப்படாமல் இருந்தது.
இதனால் கிராம மக்கள், மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குறவன்குளத்திற்கு தினமும் நான்கு முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.