PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலவளவு பகுதிகளில் வாழையில் வெள்ளை ஈ தாக்க துவங்கியுள்ளது. வாழை மரங்கள் சாய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருகியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக தோட்டக்கலை உதவி இயக்குநர் ரிஜ்வானா பர்வீன், வேளாண் துறையினர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டினர்.

