PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வீரசூடாமணிபட்டியில் மேல்நிலை தொட்டி கட்டும் பணி நடக்காத நிலையில் நடப்பதாக கலெக்டர் சங்கீதாவிற்கு பி.டி.ஓ. (கி.ஊ.,) கார்த்திகேயினி பதிலளித்தது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக நேற்று துணை பி.டி.ஓ., முத்தையா, பொறியாளர் ரவிக்குமார், ஊராட்சி தலைவர் அமிர்தம், ஒப்பந்ததாரர் விவேக், கிளார்க் சுரேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
தொட்டி அமைக்க பள்ளம் தோண்டும் பணியை துவங்கினர்.

