/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ரேஷன் பொருட்கள் வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட காலி சாக்குகளை நிர்வாகத்தினர் கொள்முதல் செய்யவில்லை.
காலிச் சாக்குகள் கடையினுள் அடுக்கி வைக்கப்பட்டதால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கார்டுதாரர்கள் மழை மற்றும் வெயிலில் காத்துக் கிடந்து பொருட்களை வாங்கும் அவலம் நிலவியது.
எலிகள் கடைக்குள் தங்கி ரேஷன் பொருட்களை உண்பதால் பொருட்கள் வீணாவதோடு, தரமும் கேள்விக்குறியானது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி காலிச் சாக்குகளுக்கான ஏலம் நடத்தியதால் கொள்முதல் துவங்கியது.