sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பாம்பலம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்; தினமலர் செய்தி எதிரொலி

/

பாம்பலம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்; தினமலர் செய்தி எதிரொலி

பாம்பலம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்; தினமலர் செய்தி எதிரொலி

பாம்பலம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்; தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மேல ரத வீதி பாம்பலம்மன் கோயிலுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

விஷப்பூச்சிகள், பாம்புகள் கடித்தால் திருப்பரங்குன்றம் பாம்பலம்மன் கோயிலை வலம்வந்து தீர்த்தம் குடித்தால் விஷம் ஏறாது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை பராமரிக்கும் பூஜாரிகளால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்பு கும்பாபிஷேகம் நடக்கவில்லை.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2011ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டபோது உப கோயில்களான காசி விசுவநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போதும் பாம்பலம்மன் கோயிலுக்கு நடத்தவில்லை.

பல தலைமுறைகளாக பூஜாரிகளே இக்கோயிலில் பூஜை நடத்தி வருகின்றனர். வருமானம் குறைவாக இருந்தாலும், பூஜாரிகளே தங்கள் செலவில் பராமரிப்பு பணிகளையும் கவனிக்கின்றனர்.

இக்கோயிலில் சேதமடைந்துள்ள மூலவர் மண்டபம், சுற்றுச்சுவரை சீரமைத்து, புதிதாக விமானம் கட்டி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தாண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாம்பலம்மன் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா கூறுகையில், ''சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் போது பாம்பலம்மன் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us