sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை பாக்கி விவகாரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை செலுத்த முயற்சி

/

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை பாக்கி விவகாரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை செலுத்த முயற்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை பாக்கி விவகாரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை செலுத்த முயற்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை பாக்கி விவகாரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை செலுத்த முயற்சி

1


PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அதை செலுத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோயில் இடங்களில் ஒன்றான எல்லீஸ்நகரில் மண்டல அறநிலையத்துறை இணைகமிஷனர் அலுவலகம் 2017 முதல் வாடகைக்கு இயங்குகிறது. இதுநாள் வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகையாக மொத்தம் ரூ.59 லட்சத்தை செலுத்தாதது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதருக்கு மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில், வாடகை பாக்கியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு மீனாட்சி கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணனிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. வாடகை பாக்கியை விரைந்து பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மண்டல இணைகமிஷனர் அலுவலக கட்டடம் அமைந்துள்ள இடம் மீனாட்சி அம்மன் கோயிலுக்குரியது. இக்கோயில் உட்பட சில கோயில்களின் நிதியில் இருந்து கட்டடம் கட்டப்பட்டது. விரைவில் அரசிடம் நிதி பெற்று கட்டடம் கட்டியதற்கான தொகையை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை பாக்கி ரூ.59 லட்சம் மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தப்படவுள்ளது. இனி மாத வாடகையாக ரூ.90 ஆயிரம் செலுத்தப்படும்.

ஏற்கனவே மேல - தெற்கு சித்திரை வீதியில் கோயில் இடத்தில் மண்டல இணைகமிஷனர் அலுவலகம் இயங்கியதற்கான வாடகை மொத்தம் ரூ.60 லட்சம் சமீபத்தில்தான் மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தப்பட்டது என்றார்.






      Dinamalar
      Follow us