/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி வரத்து கால்வாய் சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
/
செய்தி எதிரொலி வரத்து கால்வாய் சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
செய்தி எதிரொலி வரத்து கால்வாய் சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
செய்தி எதிரொலி வரத்து கால்வாய் சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது பில்லாஞ்சி. இந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பில்லாஞ்சி ஏரியின் உபரிநீர் கால்வாய், திடீர் நகர் வழியாக, சோளிங்கர் ஏரியின் உபரிநீர் கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாய் முறையாக துார்வாரி சீரமைக்கப்படாததால், திடீர் நகரில் ஆறாக தேங்கி நிற்கிறது.
இதனால், இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். உபரிநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், கோரை புற்கள் 10 அடி உயரம் வரை வளர்ந்திருந்தன.
கழிவுநீர் வெளியேற வழியின்றி, ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தேங்கி நின்றது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமலும், வாகன ஓட்டிகள் எதிர்திசை சாலையிலும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
கோரை புற்கள் அகற்றப்பட்டு, கால்வாய் துார் வாரும் பணி துவங்கியது. இதையடுத்து, சாலையில் தேங்கிய கழிவுநீர் வடிந்து, மீண்டும் கால்வாயில் பாய துவங்கியது. தற்போது போக்குவரத்து சீரடைந்துள்ளது.

