/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர் --- பட்டம்' இதழ் சார்பில் வினாடி --- வினா; விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் --- பட்டம்' இதழ் சார்பில் வினாடி --- வினா; விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் --- பட்டம்' இதழ் சார்பில் வினாடி --- வினா; விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் --- பட்டம்' இதழ் சார்பில் வினாடி --- வினா; விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
PUBLISHED ON : டிச 16, 2025 07:22 AM

கிணத்துக்கடவு: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் சார்பில், 'பதில் சொல் பரிசை வெல்' வினாடி - - வினா போட்டி, கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி - - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி --- வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.
அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி --- வினா போட்டி நடந்தது. தகுதிச் சுற்றில், 190 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'எப் ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற எட்டாம் வகுப்பு மாணவன் ஸ்ரீதர், ஏழாம் வகுப்பு மாணவன் சாமுவேல் சேவியர் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டன.
பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சூரிய பிரபா, துணை முதல்வர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள் விஜயராணி மற்றும் சுகன்யா, நூலகர் ஜெயக்குமார் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
அறிவு மேம்படுகிறது பள்ளி முதல்வர் சூரிய பிரபா கூறுகையில், 'பட்டம்' இதழில், வெளிவரும் தகவல்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் பள்ளியில் 'பட்டம்' இதழை தனியாக பைல் செய்துள்ளோம். சில முக்கிய தகவல்களை மாணவர்கள் பார்ப்பதற்காக அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தியுள்ளோம். இதைப் படிப்ப தன் வாயிலாக மாணவர்களுக்கு கல்வி அறிவு மேம்படுகிறது. மேலும் சில மாணவர்கள் நூலகத்திற்கு ஆர்வத்துடன் சென்று இதை படிக்கின்றனர். பட்டம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பதக்கம், சான்றிதழ் பெறும்போது மற்ற மாணவர்களுக்கும் ஆர்வம் அதி கரிக்கிறது, என்றார்.

