PUBLISHED ON : டிச 17, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பாலுாரில் தினமலர் செய்தி எதிரொலியால் சாலையில் இருந்த புதர்கள் அகற்றப் பட்டன.
நடுவீரப்பட்டு அடுத்த பாலுார், சன்னியாசிப்பேட்டையில் சாலையை ஓட்டி புதர்கள் அதிகளவு இருந்தன.
இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேலும் பாலுார்-பண்ருட்டி சாலையில் போக்குவரத்து தடைபடும் நேரத்தில் இந்த சாலையை, மாற்று சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த புதரில் மினி பவர் பம்ப் சிக்கியிருந்தது. புதர்களை அகற்றிட தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை புதர்களை வெட்டி அகற்றப்பட்டன.

